Tuesday, 27 August 2019

பூம்பருப்பு சுண்டல்



தேவையானவை:

கடலை பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயப் தூள்-  அரை  ஸ்பூன்
தேங்காய் துருவல் -  கால் கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு  - 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு


செய்முறை:

பருப்பை நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும்.

பின் கடாயில் எண்ணைய் விட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் போட்டு தாளித்து  கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.  

அதனுடன் வெந்த பருப்பை கொட்டி நன்கு கிளறவும். தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் சுவையான பூம்பருப்பு சுண்டல் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.