Tuesday, 27 August 2019

சென்னா கட்லெட்


தேவையான பொருள்கள் 

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
பிரெட்  துண்டு - 4 
பெரிய வெங்காயம் -  1  நறுக்கியது 
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது 
இஞ்சி துருவல்  - சிறிதளவு
கரம் மசாலா -  அரை  ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் -  2  ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை .


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம்,  உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலையை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வதக்கிய கலவையுடன்   பிரெட்  துண்டு   வேக வைத்த கடலை, கரம் மசாலா சேர்த்து, சிறிது அளவு உப்பு   சேர்த்து  நன்கு  பிசைந்து  இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.பின்பு  நான்-ஸ்டிக் தவாவில் உருண்டை களை தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.