Thursday, 1 September 2016

சத்தான புதினா பக்கோடா

                   புதினா பக்கோடா

 

 

தேவையானவை :-

கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – கால் கப்
உடைத்த முந்திரி - 10
புதினா –  1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் சோம்பு பூண்டு அரைத்த விழுது - 2 ஸ்பூன்
உப்பு –தேவையான அளவு
எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு




செய்முறை :-

புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும்.
கடலை மாவு ,அரிசி மாவு ,உப்பு   , நறுக்கிய வெங்காயம்,   உடைத்த முந்திரி,   பச்சை மிளகாய் ,சோம்பு ,பூண்டு அரைத்த விழுது   நன்கு கலந்து  புதினாவும் சேர்க்கவும்.


லேசாக தண்ணீர் தெளித்து பிரட்டினாற்போலப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக  போட்டு பொரித்தெடுக்கவும் சுவையான புதினா  பக்கோடா ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.