கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 1 ஸ்பூன் மைதா மாவு - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை
மாவுடன் சோம்பு , மிளகாய்த்தூள், மைதா மாவு உப்பு வெங்காயம்
சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்
மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
கடாயில்
எண்ணெயை நன்கு காய வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அடுப்பை
சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment