தேவையான பொருள்கள்
கேரட் - 2
கத்தரிக்காய் - 1
அவரைக்காய் - 5
உருளைக்கிழங்கு - 1
குடை மிளகாய் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்
வறுத்து அரைக்க
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 3 ஸ்பூன்
செய்முறை
குக்கரில் துவரம் பருப்புடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து மசித்து எடுக்கவும். புளியைக் கரைத்து தனியே வைக்கவும். வறுத்து, பொடிக்க வேண்டியதை பொடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெந்தயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு அத்துடன் காய் கறிகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பைப் புளிக்கரைசலில் சேர்த்துக் கொட்டி கொதிக்க விடவும். கொதிக்கும் போது சாம்பார் தூளைச் சேர்க்கவும்.
புளி பச்சை வாசனை போனவுடன் பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். இறக்கி வைக்கும் முன் வறுத்து, பொடித்த பொடி சேர்த:த ஒரு கொதி வந்ததும் கொத்த மல்லி இலை சேர்த்து இறக்கவும் .சுவையான கதம்ப சாம்பார் ரெடி.

No comments:
Post a Comment