தேவை:
நாட்டுக்கோழிக் கறி – அரை கிலோ
தக்காளி, வெங்காயம் – தலா 1
காய்ந்தமிளகாய் – 4
மிளகு, சீரகம், எண்ணெய் – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1 துண்டு
பூண்டு – 6 பல்
மோர், சோம்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு
செய்முறை:
மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். மோருடன் மஞ்சள்தூள் கலந்து அதில் கோழிக்கறியைச் சேர்த்து கழுவி தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், தக்காளி, கோழிக்கறியைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, குக்கருக்கு மாற்றவும். பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, கறிவேப்பிலை போட்டு, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

No comments:
Post a Comment