Tuesday, 22 January 2019

காடை 65



தேவையான பொருள்கள்
காடை         -   4
மிளகாய் தூள்   - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள்     - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கார்ன் பிளவர் மாவு  - 3 ஸ்பூன்
அரிசி மாவு         - 1 ஸ்பூன்
கலர்   பொடி       - சிறிதளவு
உப்பு               - தேவைக்கேற்ப
லெமன்             - 1
எண்ணெய்  பொரிக்க - தேவையான அளவு

செய்முறை:
காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள்  ,மஞ்சள்தூள்  ,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கார்ன் பிளவர் மாவு   ,அரிசி மாவு   ,கலர்   பொடி   ,உப்பு    ,லெமன்   சாறு  அனைத்தையும் சேர்த்து நன்கு கிளரி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.  கடாயில்  எண்ணெய்  ஊற்றி காய்தவுடன்   ஊற வைத்த காடையை  போட்டு 2 புறமும் திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். சுவையான காடை 65 ரெடி. 

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.