Sunday, 4 November 2018

இளநீர் பாயாசம்




தேவையான பொருட்கள்: 
 
பால் - அரை லிட்டர்
இளநீர் மற்றும் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப் 
தேங்காய் பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை
முந்திரி - 10
நெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை: 
 
இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக  அரைத்தெடுக்கவும். 
 
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.  அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும். 
 
மேலே அலங்கரிக்க இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம். சுவயான புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் தயார்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.