பச்சை பயறு - 100 கிராம் கொண்டை கடலை - 100 கிராம் காராமணி - - 50 கிராம் கொள்ளு - 50 கிராம் உப்பு - தேவைாயன அளவு வெங்காயம் நறுக்கியது - 50 கராம் தக்காளி நறுக்கியது - 1 லெம்ன் சாறு - 2 ஸ்பூன் மல்லி இலை - சிறிதளவு
செய்முறை
பயறு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் கட்டி 12 மணி நேரம் வைக்கவும்.
அவ்வாறு செய்தால் பயறு வகைகளில் முளை வர ஆரம்பித்து விடும்.
பயறு
வகைகளை அகலமான பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, லெமன் சாறு, உப்பு , மல்லி இலை அனைத்தும் சேர்த்து நன்கு
கலக்கி பரிமாறவும்.
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக்
கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.
No comments:
Post a Comment