Sunday, 10 May 2020

ரவா அப்பம்



தேவையான பொருட்கள்: 

ரவை - 1/2 கப் 
கோதுமை மாவு 1/4 கப் 
மைதா - 1/4 கப் 
சர்க்கரை - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன் 
சோடா உப்பு - 1 சிட்டிகை 
உப்பு - 1 சிட்டிகை 
தண்ணீர் - தேவையான அளவு 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடடா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ரவா அப்பம் ரெடி!!!


No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.