Friday, 15 December 2017

ஜவ்வரிசி சேமியா பாயசம்

தேவையான பொருள்கள் :

ஜவ்வரிசி - 100 கிராம்

சேமியா - 100 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

தேங்காய் - ஒன்று

பால் - 200 கிராம்

முந்திரி - தேவைக்கேற்ப

உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப

ஏலக்காய் - 8

நெய் - ஒரு தேக்கரண்டி

 செய்முறை :

தேங்காயை துருவி பாலெடுக்கவும். ஒரு கடாயில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய் விட்டு வறுத்து எடுத்து விட்டு, சேமியாவை வறுக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கிளாஸ் தண்ணீரை கொதிக்கவிட்டு ஜவ்வரிசியை வேகவிடவும்.

நன்கு வெந்த பிறகு சேமியாவை போட்டு வேகவிடவும். கெட்டியாக இருந்தால் அடிப்பிடித்து விடும். சிறிது தண்ணீர் ஊற்றலாம்.

சேமியாவும் வெந்ததும் சர்க்கரையை போட்டு கரைந்தவுடன் ஏலக்காயை தூள் செய்து போட்டு முந்திரி, திராட்சை, பால் ஆகியவற்றை சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பாலை விட்டு இறக்கவும்.

மேலும் வாசத்திற்கு பாதி மிளகு அளவு பச்சை கற்பூரத்தையும், கடுகு அளவு ஜாதிக்காயையும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்து ஊற்றலாம். மிகவும் நன்றாக இருக்கும். அதிகமானால் நன்றாக இருக்காது.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.