Saturday, 27 May 2017

பருப்பு சாதம்

பருப்பு சாதம்






தேவையானவை:
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் தாளித்து, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கவும்.
அதில் கழுவிய அரிசி, பருப்பு சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரின் மூடியை போட்டு 1 விசில் வந்ததும், மிகச்சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
கடைசியாக மல்லி இலை தூவி கலக்கவும்..

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.