Monday, 30 January 2017

செட்டிநாடு வத்த குழம்பு

தேவையான பொருட்கள்: 

 சுண்டைக்காய் வத்தல் - 5 டீஸ்பூன்
 வெங்காயம் - 3 (நறுக்கியது) 
பூண்டு - 10 பற்கள்
 தக்காளி - 1 (நறுக்கியது)
 சாம்பார் தூள் - 3 
டீஸ்பூன் புளி - 1 எலுமிச்சை அளவு 
உப்பு - தேவையான அளவு 

 தாளிப்பதற்கு... 

 எண்ணெய் - 3 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
வரமிளகாய் - 3 
கறிவேப்பிலை - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை:

 முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால், செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.