Thursday, 8 September 2016

கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு



 
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்
நெய் – 1 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ராகி மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். 
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி வைக்கவும்.சூடான ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இத்துடன் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு மாவைப் பிசறி வைக்கவும். இந்த மாவை இட்லிச் சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.
 
வேக வைத்த ராகி மாவுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.