Sunday, 23 December 2018

முருங்கைக்காய் சூப்



தேவையான பொருள்கள் 

முருங்கைக்காய் - 4
நசுக்கிய    பூண்டு - 5 
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகுதூள்  - சிறிது
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது - சிறிது
மஞ்சள் தூள் -சிறிதளவு
நறுக்கிய சின்ன   வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
நெய்   - தேவையான அளவு
பருப்பு - 5  ஸ்பூன்
 

செய்முறை

முருங்கைக்காய்யை விரல் நீளத்திற்கு வெட்டி கொள்ளவும். வெட்டிய முருங்கைக்காய்யுடன் பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்த முருங்கைகாயில், ஒரு ஸ்பூன் உதவியுடன் அதனின் சதைகளை தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த  பருப்பை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். பருப்புடன் பிரித்து எடுத்த முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிது  நெய்  விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு ,கருவேப்பிலை , மிளகு தூள்   சேர்த்த பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு பிரித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துள்ள பருப்புடன் கூடிய முருங்கைக்காய் சதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் பொது, கொத்தமல்லி தழைகளை சேர்த்து சிறிது நிமிடங்களில் இறக்கி விடவும். சுவையான முருங்கைக்காய் சூப் ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.