Sunday, 8 July 2018

செட்டிநாடு நண்டுக் குழம்பு

                            செட்டிநாடு நண்டுக் குழம்பு

 

தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 4
காய்ந்த   மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
இஞ்சி - சிறிது
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 3  ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
நல்லெண்ணெய் - குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு


தாளிக்க

பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு  - சிறிதளவு


செய்முறை:

நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில்  மஞ்சள் தூள் போட்டு  பிரட்டி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன  வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

கடாயில்  எண்ணெய்  விட்டு    தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில்நறுக்கிய  வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

இதில் அரைத்து தேங்காய் விழுது   சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.