Sunday, 1 July 2018

ட்ரை ஃப்ரூட் போளி

                                            ட்ரை ஃப்ரூட் போளி

 

தேவையானவை:

ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10
உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4
பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - ஒரு சிறிய கப்
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து... தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,. சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.