Saturday, 13 October 2018

பாதுஷா



தேவையானவை

மைதா - 1  கப் 
வெண்ணெய் - 25  கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்
சர்க்கரை -  முக்கால் கப்
பால் - அரை கப்
தண்ணீர்  அரை கப்
எண்ணெய்  -  பொரிக்க தேவையான அளவு

செய்முறை

மைதா மாவுடன்  முதலில்   ஆப்பசோடா, பேக்கிங் பவுடர்  இரண்டையும்  சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி  அதனுடன்  வெண்ணெய்  சேர்த்து  நன்கு கலந்து  கொள்ளவும் .பின்பு  அதனுடன்   கொஞ்சம்  கொஞ்சமாக  பால்    சேர்த்து  சப்பாத்தி மாவு போல் பிசைந்து    அரை மணி  நேரம்  ஊற வைக்க   வேண்டும்.பின்பு  ஜீரா செய்ய அரை  டம்ளர்   தண்ணீர்   சர்க்கரையைப் போட்டு    கம்பி    பதம்   வந்ததும்   லெமன்   பிழிந்து  விட்டு  இறக்கி ஆற வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.


ஊற வைத்த மாவினை  லெமன் சைஸ் உருண்டைகளாக  உருட்டி  கையில் வைத்து வடை மாதிரி  தட்டி நடுவில்  குழி செய்து கொள்ள வேண்டும்
இ‌வ்வாறே அனை‌‌த்து மா‌வினையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம். அதிக கனமாக இல்லாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.இவ்வாறு  செய்த பாதுஷாவை   கடாயில் எண்ணெய்  காய வைத்து   அடுப்பை  சிம்மில்  வைத்து மிதமான சூட்டில்    இரு பக்கமும் நன்கு வெந்து பொன் நிறம் வந்ததும் எடு‌க்க‌வு‌ம்.பொ‌ரி‌த்த பாதுஷா‌க்களை ‌ஜீரா‌வி‌ல் போட்டு  1   மணி  நேரம்   ஊற    வைத்து  தனியே தட்டில்   எடுத்து வைக்க வேண்டும்.சுவைாயன பாதுஷா   ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.